தேர் தயரிக்க இடையூறு செய்யும் பாஜக பொதுமக்கள் சாலை மறியல்
கோவை, ஜூன் 10- அந்தோனியார் ஆலய தேர் தயாரிக்கும் இடத்தில் மதக் கலவரத்தை தூண்டும் விதமாக பெட்டி கடை வைத்து பாஜக கொடி கட்டி இடையூறு செய்வதாக ஊர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை புலியகுளத்தில் வரும் 15 ஆம் தேதியன்று புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு புலியகுளம் பகுதியில் 13க்கும் மேற் பட்ட தேர் தயாரிப்பு பணியை கிறிஸ்துவர்கள், இந்துக்கள் மற் றும் இஸ்லாமியர்களும் என ஒன்றிணைந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், புலியகுளம் மாரியம்மன் கோயில் வீதி அருகே தங்க மாதா சிலை கொண்ட தேர் தயாரிப்பு பணியை துவங்க ஏற்பாடு செய்தபோது அப்பகுதியை சேர்ந்த பாஜகவி னர் பெட்டிகடையை வைத்து பாஜக கொடியை கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆண்டுதோறும் நடை பெறும் பணிக்கு இடையூறு ஏற்படுத்துவதால், பொதுமக் கள் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் பொது இடத்தில் பெட்டிகடை வைத்து மத ஒற்றுமைக்கு இடையூறு ஏற் படுத்துவதாக புகார் அளித்தனர். இதனையடுத்து ராமநாத புரம் காவல் நிலையம் சார்பில் மாநகராட்சிக்கு பெட்டி கடையை அப்புறப்படுத்த கடிதம் அளித்துள்ளனர். இந் நிலையில் கடையை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரி கள் நோட்டிஸ் ஒட்டினர். ஆனால் கடையை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக தெரி வித்து அப்பகுதி பொதுமக்கள் திங்களன்று புலியகுளம் விநா யகர் கோயில் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடு பட்ட பொதுமக்களிடம் கடையை அப்புறப்படுத்தி தருவ தாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போராட் டத்தை கைவிட்டனர். தேர் வரும் ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ள நிலை யில் குறைந்த நாட்கள் உள்ளதால் உடனடியாக தேர் தயா ரிக்க வழக்கமான இடத்தை பயன்படுத்த உதவ வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலை யில் செவ்வாயன்று இடையூறாக அமைக்கப்பட்ட இரு கடை களை போலீசார் அகற்றினர்.