tamilnadu

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் என்ற சட்ட உரிமையை  மீறும் கத்தோலிக்க சிரியன் வங்கி நிர்வாகத்தின் நடவடிக்கை கள் மற்றும் ஊழியர் விரோத போக்கு உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத் தின் சார்பில் புதனன்று கோவையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள  கத்தோலிக்க சிரியன் வங்கியின் கோவை மண்டல அலுவல கம் முன்பு, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,  வங்கி நிர்வாக தரப்பில் தொட ரும் ஊழியர் விரோத நடவடிக்கைகள், 11 ஆவது மற்றும் 12  ஆவது இரு தரப்பு ஊதிய ஒப்பந்தங்களை நிறைவேற்ற மறுப் பது. கத்தோலிக்க சிரியன் வங்கி நிர்வாகம் சம வேலைக்கு சம  ஊதியம் என்ற சட்ட உரிமையை நிர்வாகம் மீறுவது உள் ளிட்ட நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி மாவட் டச் செயலாளர் மகேஸ்வரன் உரையாற்றினார். போராட்டத் தில் திரளான வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

ரூ.95 லட்சம் மதிப்பிலான தரச் சான்று  இல்லாத பொருட்கள் பறிமுதல்

கோவை, ஏப். 9 – செட்டிபாளையம் பகுதியில் அமைந்திருக்கும் அமே சான் நிறுவனத்தின் கிடங்கில் சுமார் ரூ.95 லட்சம் மதிப்பி லான தரச் சான்று இல்லாத பல்வேறு பொருட்கள் பறிமுதல்  செய்யப்பட்டன. இந்திய தர நிர்ணய அமைவன அதிகாரிகள் செட்டி பாளையத்தில் உள்ள அமேசான் நிறுவனத்தின் கிடங்கில்  அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், தண்ணீர் பாட்டில்கள், மின்விசிறிகள், விளையாட்டு பொம் மைகள், குழந்தைகளுக்கான டயாப்பர்கள், நீர் சூடேற்றிகள்,  சிசிடிவி கேமராக்கள் மற்றும் காலணிகள் உட்பட சுமார்  4500 பொருட்கள் உரிய தரச் சான்று இல்லாமல் விற்பனைக் காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆய்வின் முடி வில், தரமற்ற பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்த னர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு  சுமார் 95 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அதிகாரிகள் கூறுகையில், “பொதுமக்கள் ஆன் லைனில் பொருட்கள் வாங்கும் போது, அந்த பொருட்களின்  தரச் சான்றை கவனமாக சரிபார்க்க வேண்டும். குறிப்பாக,  ஐஎஸ்ஐ முத்திரை இருப்பதை உறுதி செய்வது அவசியம்” என்றனர். அதுமட்டுமின்றி, “BIS Care” என்ற மொபைல் செயலி யைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும்  பொருட்களின் பதிவு சான்றிதழ் மற்றும் தரத்தை உறுதி  செய்து கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

குறைந்தபட்ச ஆதார விலையில் பருப்பு கொள்முதல்: ஆட்சியர் தகவல் திருப்பூர்,

ஏப்.9 - திருப்பூர் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில்  நியாயமான சராசரி தரத்திற்கு கிலோ ஒன்றுக்கு  பச்சைப்பயறு  ரூ.86.82 மற்றும் உளுந்து ரூ.74.00 க்கு 2025ஆம் ஆண்டில்  மார்ச் 15 முதல் ஜூன் 12 வரை கொள்முதல் செய்யப்பட வுள்ளது என ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில், பச்சை பயறு மற்றும் உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில்,  அவர்கள் விளைவித்த  பச்சைச்பயறு  மற்றும் உளுந்து  ஆகியவற்றை மத்திய அரசின் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலம், விலை ஆதரவு திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச ஆதரவு விலை யில் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.  அதன்படி,  திருப்பூர் மாவட்டத்தில் முறையே 10 மெட்ரிக் டன் மற்றும்  350 மெட்ரிக்டன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு்ளது. இம் மையத்தில் நியாயமான சராசரி தரத்திற்கு கிலோ ஒன்றுக்கு    பச்சைப்பயறு ரூ.86.82 மற்றும் உளுந்து  ரூ.74.00 என்ற விலைக்கு 2025 ஆம் ஆண்டில் மார்ச் 15 முதல் ஜூன் 12  வரை கொள்முதல் செய்யப்படவுள்ளது.  மேலும், விவசாயிக ளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பச்சைப்பயறு  மற்றும்  உளுந்து ஆகியவற்றிற்கான கிரயத்தொகை விவசாயிக ளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.    இத்திட் டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ள பச்சைப் பயறு மற்றும் உளுந்து அயல் பொருட்கள் கலப்பு 2 சதவீதம்,  இதர தானியங்கள் கலப்பு 3 சதவீதம், சேதமடைந்த பருப்பு கள் 3 சதவீதம், சிறிதளவு சேதமடைந்த பருப்புகள் 4 சதவீதம்,  முதிர்வடையாத மற்றும் சுருங்கிய பருப்புகள் 3 சதவீதம், வண் டுகள் தாக்கிய பருப்புகள் 4 சதவீதம், ஈரப்பதம் 12 சதவீதம்  தரத்தை கொண்டிருத்தல் வேண்டும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள்,  சிட்டா, அடங்கல், ஆதார்  எண், மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களுடன் உடு மலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் (கைபேசி எண்: 9443962834), முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே, பச்சைப்பயறு  மற்றும்  உளுந்து சாகுபடி செய்துள்ள திருப்பூர் மாவட்ட அனைத்து  விவசாயிகளும் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத் திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.