கோவையில் ஆட்டோ ஓட்டி வரும் தொழிலாளர்களை பா.ஜ.க.,வில் இணையக்கூறி நிர்பந்திப்பதாகவும், ஜாதி மத ரீதியாக தீண்டாமையை பின்பற்றுவதாகவும் கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் மூன்று பேர் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
விசாரணையில் மூவரும் பல ஆண்டுகளாக துடியலூர் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வரும் நிலையில் கடந்த மூன்று மாதங்களாக பா.ஜ.க.,வை சேர்ந்த சில ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் கட்சியில் இணையும் படி வற்புறுத்தியுள்ளனர். மூவரும் ஏற்கனவே திமுக.,வில் இருப்பதால் பா.ஜ.க.,வில் இணைய மறுத்துள்ளனர். இதனால் பா.ஜ.க.,வை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அவர்களை ஆட்டோவை இயக்க விடமால் தடுத்ததும், ஜாதி மற்றும் மத ரீதியாக தீண்டாமையை கடைபிடித்தும் வந்துள்ளனர்.
கட்சியில் இணையக்கூறி நிர்பந்தித்து, வாழ்வாதாரத்தை முடக்கியுள்ளதால் வாகன லோன், குழந்தைகளுக்கான பள்ளி கட்டணம் ஆகியவற்றை செலுத்த முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.