tamilnadu

img

கோவை மக்களின் வரவேற்பை பெற்ற "ஆர்ட் ஸ்ட்ரீட்"

கோவை, ஜன.6- கோயம்புத்தூர் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ரேஸ்கோர்ஸில் நடத்தப்படும் ஆர்ட் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கோயம்புத்தூர் விழாவை முன்னிட்டு, மாநகரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடத்தப்பட்டு வரும் கலைத்தெரு (Art street) நிகழ்ச்சி கோவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர், நிகழ்வை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியானது சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் அவர்களது கலைப்படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

இதில் மணல் ஓவியங்கள், ரெட்ரோ ஓவியங்கள், பிச்சுவாய் பெயிண்டிங், கேலிகிராபி, 3டி மாடலிங், காமிக் ஸ்ட்ரிப், குரோச்செட், களிமண் கலை, மட்பாண்டங்கள், மூங்கில் கூடை போன்ற பல்வேறு வகையான கலை படைப்புகள், கிரியேட்டிவ் கேலிகிராபி, 3-டி மோல்ட்ஸ் மற்றும் குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர்களின் உருவப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.மேலும், குழந்தைகளுக்கான ஓவிய பயிற்சி பட்டறையும் நடத்தப்படுகிறது.