புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி
சேலம். மே 31- புகையிலை எதிர்ப்பு தினத்தை முன் னிட்டு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை (NO TOBACCO DAY) முன்னிட்டு, தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் கொங்க ணாபுரம் கிளை சார்பில், சனியன்று விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடை பெற்றது. கிளைத் தலைவர் ராஜா தலைமை வகித்தார். செயலாளர் உமா மகேஷ் வரவேற்றார். மாவட்டத் தலை வர் செங்கோட்டுவேல், ஆதித்யா நர் சரி & பிரைமரி பள்ளியின் தாளாளர் ரவி சங்கர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கொங்கணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஹேமாவதி கொடி யசைத்து சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார். ரங்கபாளையத்தில் துவங்கி பேரணி ஆரம்ப சுகாதார நிலையம், பேருந்து நிலையம் வழியாக சென்றது. முடிவில், கிளைப் பொருளாளர் யுவ ராணி நன்றி கூறினார். நாமக்கல் இதேபோன்று, நாமக்கல் மாவட் டம், திருச்செங்கோடு நகராட்சி நிர்வா கம் சார்பில், அண்ணா சிலை அருகிலி ருந்து புகையிலை எதிர்ப்பு தின பேரணி துவங்கியது. நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ் பாபு தொடங்கி வைத்தார். வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக நகராட்சி அலுவலகத் தில் பேரணி நிறைவடைந்தது. கோவை கோவை மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் பந்தய சாலையில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் துவக்கி வைத்து, அவரும் இருசக்கர வாகனத்தை இயக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்டவர் கள் கலந்து கொண்டனர். முன்னதாக புகையிலை ஒழிப்பு குறித்தான கையெ ழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாந கர காவல் ஆணையர் சரவண சுந்தர் கலந்து கொண்டார்.