tamilnadu

img

குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 வழங்கிடுக

கருப்பு உடை அணிந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு  அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜுன் 10-  தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சட்டமன்றத் தேர்தலின்போது அறிவித்த குறைந்தபட்ச ஓய்வூதி யத்தை ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும். புதிய பென்ஷன்  திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாத இறுதியில் சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கு வது போல் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் புவனேஸ்வரி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜசுலோச்சனா, மாவட்டத் துணைத்  தலைவர் சண்முகம், மாவட்டச் செய லாளர் சந்திரா, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செங்குட்டுவன், மாவட்டப் பொருளாளர் மணிமேகலை உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.