ஒற்றைக்கையோடு சைக்கிளில் பயணித்து தபால் விநியோகிக்கும் முதியவர் கோவை மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராமன். 80 வயது நிரம்பிய இவர் இளம் வயதில் நடந்த விபத்து ஒன்றில் தனது வலது கையை இழந்துள்ளார். இந்நிலையில் அஞ்சலகத்தில் போஸ் மாஸ்டர் வேலை கிடைத்ததால் 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். கோவை தடாகம் பகுதில் 10 ஆண்களுக்கு முன் குடியேறிய இவர் கோவை மாநகரின் போக்குவரத்து நெரிசல்களுக்கிடையே தடாகம் பகுதியல் இருந்து சாய்பாபா காலனியில் உள்ள தனியார் கூரியர் அலுவகத்திற்கு வந்து அங்கு பார்சல்களை பெற்று வீடுகளுக்கு விநியோகம் செய்கிறார். அது மட்டும் இல்லாமல் மனைவிக்கும் உடல் நிலைசரி இல்லாததால் வீட்டு வேலைகளையும் நானே கவனித்து கொள்கிறோன் என்கிறார். தற்போது தினமும் 60 கிலோ மீட்டர் பயணித்து கூரியர் விநியோகம் செய்து வருகிறார்.
தள்ளாடும் வயதிலும் உறுதியோடும், உழைப்பின் மீது தீராக் காதலும் கொண்ட இவரது வாழ்க்கை பலருக்கும் எடுக்காட்டாக உள்ளது.