tamilnadu

img

கோவையில் கொரோனா அறிகுறிகளுடன் 3 பேர் அனுமதி

வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த மூவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததைத்தொடர்ந்து 3 பேர் மருத்துவமனையில் அனுமதிமதிக்கப்பட்டுள்ள சம்பவம் கோவை மாநகரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் மலேசியாவில் பணியாற்றி வருகிறார். இவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கோவை ஜெம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை (விரைவீக்கம்) பெருவதற்காக மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்து அங்கிருந்து கோவை விமான நிலையம் வந்தார். அவரை பரிசோதித்த போது, கொரோனா பாதிப்புகளுக்கான அறிகுறிகளான சளி, காய்ச்சல் மற்றும் இருமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அறிந்த மருத்துவ குழுவினர், அவரை கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தனி பிரிவில் வைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும், அவரது சளி மாதிரிகளை பரிசோதனைக்காக சென்னை கிங்ஸ் இன்ஸ்ட்யூட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதேபோன்று சார்ஜாவில் இருந்து இன்று அதிகாலை விமானம் மூலம் கோவை வந்த கேரள மாநில இளைஞர் மற்றும் பங்களாதேஷிலிருந்து கோவை மேட்டுப்பாளையம் பகுதிக்கு வேலைக்காக வந்த இளைஞர் என மேலும் இருவர் கொரோனா அறிகுறிகளுடன் கோவை மருத்துவமனையில் உள்ள சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது சளி மற்றும் ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.