கோவையில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது தேசியக்கொடியை அவமதித்த குற்றச்சாட்டில் பாஜக பிரமுகர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செ ய்துள்ளனர்.
கோவையில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. சரவணம்பட்டி பகுதியில் பாஜக கொடி கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றினர். பா.ஐ.க வின் கொடிக்கம்பத்தில் , அக்கட்சியின் சின்னம் தாமரை சின்னம் இருந்த நிலையில் அதில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இது தேசிய கொடி ஏற்றுவதற்கான சட்ட விதிகளுக்கு புறம்பானது என சரவணம்பட்டி காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது .
இந்த புகாரின் அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சியின் கணபதி மண்டல தலைவராக இருக்கும் வெங்கடேஷ் மீது, தேசிய சின்னங்கள் அவமதிப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.