கோவை மாவட்டத்தில் சிறப்பு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 7 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணிக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கோவை மதுக்கரை காவல் நிலையத்தில் பணியாற்றும் இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட ஏழு காவலர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து காவலர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளளனர். கோவையில் ஏற்கனவே துடியலூர், சூலூர், போத்தனூர் ஆகிய காவல்நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது நான்காவதாக மதுக்கரை காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது.