கோவை:
கோவை சூலூர் அருகே கார் மீது லாரி மோதியதில் ஐந்து பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் முகமது பஷீர். இவர் கட்டிட கான்ட்ராக்டர் வேலை செய்து வருகிறார். இவரிடம் பணியாற்றி வரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 4 பேர் சனியன்று கோவை வழியாக கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். காரை முகம்மது பசீர் ஓட்டி வந்துள்ளார். இவர்கள் சென்ற கார் கோவை, சூலூர் பட்டணம் புதூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, வெள்ளலூர் பிரிவு அருகே திருச்சியில் இருந்து பழைய பேப்பர்களை ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரியுடன் நேருக்கு நேராக மோதியது.
இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். காரை ஓட்டி வந்த டிரைவர் பஷீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து சூலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் மீது லாரி மோதிய விபத்தில் ஐந்து பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.