tamilnadu

img

புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு நடந்த கோர விபத்து

கொரோனா மற்றும் ஊரடங்கிற்கு பயந்து புலம்பெயரும் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் நிகழ்வு இந்தியாவில் நடைபெற்று வருகிறது,இந்நிலையில்  உத்திரபிரதேச மாநிலத்தில் ஆரையா மாவட்டத்தில்  நடந்த கோர விபத்தில் 24 புலம்பெயரும் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

  இந்நிகழ்வில் தொழிலாளர்கள் இராஜஸ்தானில் இருந்து புறப்பட்ட (பீகார் ,மேற்கு வங்காளம்) 54 புலம்பெயரும் தொழிலாளர்கள் உத்திரபிரதேசத்தில் விபத்திற்கு உள்ளாகினர், இதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 20 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப் பட்டுள்ளனர்.
        
   சமீப காலமாக சொந்த ஊர் திரும்பும் புலம்பெயரும் தொழிலாளர்கள் அரசு உதவாத நிலையில் மகாராஷ்டிராவில் (மே 8 ) ரயில் மோதி 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
    

   மத்திய பிரதேசத்தின் (மே 9  ) சாலை விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் .
             

          ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்பும் புலம்பெயரும் தொழிலாளர்கள் உயிரிழப்பது அதிகரிக்கும்

நிலையில் ,புலம்பெயரும் தொழிலாளர்களின் உயிரை காக்க அரசு என்ன செய்யப் போகிறது ?