tamilnadu

img

ஐபிஎல் ... ராஜஸ்தான் அணியின் பீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று...  

ஜெய்ப்பூர் 
உலகின் மிகப்பெரிய உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல் தொடரின் நடப்பாண்டிற்கான சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், ஐபிஎல் அணிகள் வரும் 21-ஆம் தேதி துபாய் செல்லவிருக்கிறது. 

இந்நிலையில், முன்னாள் சாம்பியனும், பலமான அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திஷந்த் யாக்னிக்-கிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்ய அவர் அறிவுத்தியுள்ளார். 2 நெகடிவ் முடிவுகள் கிடைக்க இன்னும் 14 நாட்கள் ஆகும் என்பதால் திஷந்த் யாக்னிக் துபாயில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கற்பது சிரமமான விஷயம் தான்.  

;