கோவை, மார்ச் 20- கோவை மாவட்டம், அரசு மருத் துவ கல்லூரி மருத்துவமனையில் வெள்ளியன்று கொரோனா வைரஸ் பரிசோதனை மையத்தினை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி திறந்து வைத்து செய்தியாளர்களை சந்திந்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்வர் அறிவுரையின் படி கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை, தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை விமானநிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வரும் பய ணிகளிடம் கொரோனா வைரஸ் தொடர்பாக சோதனை செய்வதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் மருத்துவக்குழுக்கள் அமைக்கப் பட்டு, கண்காணிப்புப் பணி மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில், சளி, காய்ச்சல், இருமல் அறி குறிகளுடன் அனுமதிக்கப்பட்டவர் களுக்கு, கொரோனா பாதிப்பு இருக் கிறதா என்பதை அறிய அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு சென்னையிலுள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி பரிசோ தனை முடிவுகளை பெற்றுவந் தோம். தற்போது, கோவை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் கொரோனா வைரஸ் பரி சோதனைக் கூடம் அமைக்கப்பட் டுள்ளது. இதில், வைரஸ் அறிகுறி உள்ளவர்களுக்கு இங்கேயே பரி சோதனை செய்து கொள்ளமுடியும். மேலும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்து வமனை மற்றும் தனியார் மருத்துவ மனைகளிலும் இதற்கென தனி வார் டுகள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவம னையை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சி யர் தெரிவித்தார்.