tamilnadu

காளை மாட்டுடன் டிக்டாக்கில் ஈடுபட்ட இளைஞர் பலி

 கோவை, நவ. 23-  காளை மாட்டுடன் குட்டையில் இறங்கி டிக் டாக் வீடியோ  பதிவு செய்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை கருமத்தம்பட்டியை அடுத்த ராயர் பாளையத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன், புவனேஸ்வரன், மாதவன் ஆகியோர் விசைத்தறி தொழில் செய்து வருகின்றனர். இவர்களது நண்பரான விக்னேஸ்வரன் அவர் வளர்த்து வரும் காளை மாடுகளை வைத்து டிக் டாக் செய்வ தில் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் காளை மாட்டை குளிப்பாட்டுவதற்காக நண்பர்கள் நால்வரும் கடந்த வியாழனன்று வடுகபாளையத்திலுள்ள குட்டைக்குச் சென்றனர்.  அங்கு, மாட்டின் மீது ஏறி குதித்தும், அதனை நீரில் அமிழ்த்தியும் விளையாடியபடி டிக் டாக் வீடியோ எடுத் துள்ளனர். அப்போது மிரண்டு போய் இங்கும், அங்கும் ஓடிய காளை மாடு, ஒரு கட்டத்தில் ஆழமான பகுதிக்கு விக்னேஸ்வரனை இழுத்துச் சென்றது. அப்போது, நீச்சல் தெரியாமல் தத்தளித்த அவரை மற்ற மூவரும் காப் பாற்ற முயன்றும் முடியாமல் போகவே, நீரில் மூழ்கி பரி தாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், விக்னேஸ்வரன் உடலை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

;