மே.பாளையம், மே 30- கொரோனா கால ஊரடங்கால் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ரத்த வங்கியில் குறைந்த ரத்தமே இருப்பு உள்ளதால், அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் முகாம் நடத்தி ரத்த தானம் செய் தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மருத்து வனையில் தினசரி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள் நோயாளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, பெண்களுக்கான பிரசவ வார்டு உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. மேட்டுப்பாளையம் மட்டுமின்றி உதகை மற்றும் கோத்தகிரி சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் சிக்கி காயமடைவோருக்கு இம் மருத்துவமனையிலேயே முதற்கட்ட சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் ரத்த தானம் செய்வோர் எண்ணிக்கை குறை வாக உள்ளதால் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவம னையில் உள்ள ரத்த வங்கியில் ரத்த இருப்பு வெகுவாக குறைந்து விட்டது.
இதனால் விபத்து, பிரசவம் போன்ற அவசர கால சிகிச்சைக்கு உடனடியாக தேவைப்படும் ரத்த வகைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை யறிந்த இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் “நமது மேட் டுப்பாளையம்” என்ற பெயரில் ஒன்றிணைந்து சனியன்று ரத்த தான முகாம் நடத்தினர். மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரசு மருத்துவமனை மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து நடத்திய ரத்த தான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களும், இளம் பெண்களும் ரத்தத்தை தானமாக வழங்கினர். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மருத்து வர்கள் மற்றும் செவிலியர்கள் உரிய மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளுடன் ரத்த சேகரிப்பில் ஈடுபட்டனர். தன் னார்வர்களால் நடத்தப்பட்ட ரத்த தான முகாம் மூலம் 102 யூனிட் ரத்தம் கிடைத்ததால் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் ரத்த கையிருப்பு போதுமான அளவிற்கு உயர்ந்துள்ளது. உள்ளூர் இளை ஞர்களின் இந்த அவசர கால சேவை மனப்பான்மை பலரது பாராட்டை பெற்றுள்ளது.