tamilnadu

img

அடிப்படை வசதிகளை நிறைவேற்றிடுக

உதகை, ஜுலை 22- தேவர்சோலை பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிடக்கோரி வாலி பர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து சாலைகளையும் செப்பனிட்டு போக்குவரத்துக்கு உகந்த தாய் மாற்றிட வேண்டும். வனவிலங்குகள் தாக்குதலிருந்து மக்களை பாதுகாத்திட வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்தை நவீனப்படுத்தி போதிய மருத்துவர்களை  நியமித்திட வேண்டும். உழவர் சந்தை, கழி வறை, நூலகம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத் திட வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தேவர் சோலை கிராம நிர்வாக அலுவலகம் முன்பு  திங்களன்று கோரிக்கை முழக்க ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளைச் செயலாளர் சி.ஏ.விஜேஷ் தலைமை வகித்தார். சிபிஎம் கூடலூர் தாலுகா செய லாளர் குஞ்சுமுகமது, வாலிபர் சங்க தாலுகா தலைவர் ஜேன்சன், செயலாளர் கே.பிரபாகரன், பொருளாளர் சிராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளா னோர் கலந்து கொண்டனர்.