tamilnadu

img

கால்பந்து, எறிபந்து போட்டிகளில் ஏற்காடு பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

ஏற்காடு, நவ.8- சேலம் மாவட்ட அளவிலான கால்பந்து மற்றும் எறி பந்து போட்டிகளில் ஏற்காடு மாண்ட்போர்ட் சமுதாய பள்ளி  மாணவிகள் வெற்றிக்கோப்பையை கைப்பற்றினர். சேலம் மாவட்ட அளவிலான இளையோர் பெண் களுக்கான கால்பந்து போட்டி சேலம் மவுண்ட் மேரி பள்ளி யில் நடைபெற்றது. இதன் இறுதி போட்டியில் ஏற்காடு மாண்ட்போர்ட் சமுதாய பள்ளி மாணவிகள், சங்ககிரி மைய  அணி மாணவிகளுடன் மோதினர். இதில் மாண்ட்போர்ட் சமுதாய பள்ளி மாணவிகள் 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். மேலும் மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கும் தகுதி பெற்றனர். இதேபோல் மேல்மூத்தோர் பெண்களுக்கான எறிபந்து போட்டி குளூனி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதன் இறுதி போட்டியில் மாண்ட்போர்ட் சமுதாய பள்ளி மாணவிகளும், மேட்டூர் மைய அணி மாணவிகளும் மோதினர். இதில் மாண்ட்போர்ட் சமுதாய பள்ளி மாணவி கள் 14- 3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். இதைத் தொடர்ந்து மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கும்   தகுதி பெற்றனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவி களையும், பயிற்றுனர்களையும் பள்ளி தாளாளர் ஜார்ஜ் பாராட்டினர்.