அரசியல் அறிவியல் பாடப்பிரிவு தருமபுரி அரசு கல்லூரியில் தொடக்கம்
தருமபுரி, ஆக.17- தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் புதியதாக பிஏ அரசியல் அறிவியல் என்ற பாடப்பிரிவு தொடங்க அரசு அனுமதி அளித் துள்ளது. இதுகுறித்து தருமபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பாக்கி யமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2019-2020 கல்வியாண்டில் தமிழக அரசால் இக் கல்லூரிக்கு புதியதாக பிஏ அரசியல் அறிவியல் என்ற பாடப்பிரிவு தொடங்க அனுமதி வழங்கப்பட் டுள்ளது. அப்பாடப் பிரி விற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வரும் 19ந் தேதி முதல் 23ந் தேதி வரை வழங்கப்படும். இப் பாடப்பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பொது விண்ணப்பத்தின் விலை ரூ.50.தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர் களுக்கு விண்ணப்பம் இலவசமாக வழங்கப்படும். இலவச விண்ணப்பம் பெறு வோர் அசல் சாதி சான்று காண்பித்து அதன் நகல் கொடுத்து பெற்றுக் கொள் ளலாம் என தெரிவித் துள்ளார்.
ஏற்காடு பெண்கள் பள்ளியின் 125 ஆவது ஆண்டு விழா
ஏற்காடு, ஆக.17- சேலம் மாவட்டம், ஏற் காடு நகரப் பகுதியில் அமைந்துள்ள தூய இருதய பெண்கள் ஆங்கிலே-இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் 125ஆவது ஆண்டு விழாவும், விளை யாட்டு போட்டியும் வெள்ளி யன்று நடைபெற்றது. தமிழ்நாடு சுகாதாரத் துறை இயக்குனர் பியூலா ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக மாநி லங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், மாவட்ட கல்வி அலுவலர் சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.