கோவை, ஜூன் 17- கோவையில் தவறான சிகிச் சையினால் இளம்பெண் உயிரி ழந்ததாக குற்றம்சாட்டி சித்த மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி இளம்பெண்ணின் உற வினர்கள் சாலை மறியலில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவைபுதூர், நேதாஜி நகரைச் சேர்ந்த கணேசன், மல்லிகா தம்பதியின் மகள் சத்யப்பிரியா (20). இவர் கோவை அரசு கலைக்கல்லூரியில் மூன் றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக மாதவிடாய் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதை யடுத்து சத்யபிரியா, செல்வபுரம் பகுதியில் உள்ள மனோன்மணி சித்த வைத்திய சாலைக்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அங்கு மருத்துவர் குருநாதன் கொடுத்த மருந்துகளை கடந்த ஆறு மாதங்களாகப் பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால் இந்த மருந் துகள் சத்யப்பிரியாவுக்கு ஒவ் வாமையை ஏற்படுத்தி, உடல் நிலையைப் பாதிப்படையச் செய்தது. இந்நிலையில் சத்யபிரியா கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட் டார். இதனைத் தொடர்ந்து சத்யபிரியாவின் பெற்றோர் கடந்த மே 1ஆம் தேதி உடல்நிலை பாதிப்புக்கு காரணம் சித்த மருத்துவரின் தவறான மருந்து என செல்வபுரம் காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். ஆனால் காவல் நிலையத்தில் நடவ டிக்கை எடுக்காததால் மே 31-ஆம் தேதி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த னர். இந்நிலையில் திங்களன்று அதிகாலை 2 மணிக்கு சத்யபிரியா சிசிச்சை பலனின்றி அரசு மருத்து வமனையில் பரிதாபமாக உயிரி ழந்தார். இதையடுத்து மனோன்மணி சித்த வைத்திய சாலையை மூட வேண்டுமெனவும், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப் போக்கு டன் செயல்பட்ட செல்வபுரம் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி சத்தியபிரியாவின் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட் டனர். இவர்களுன் காவல் துறை யினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய் தனர்.