tamilnadu

img

எழுத்தாளர் டி.செல்வராஜ் நினைவேந்தல் கூட்டம்

தருமபுரி, ஜன. 13- சாகித்திய அகடாமி விருது பெற்ற மூத்த  எழுத்தாளர் டி.செல்வராஜின் நினைவேந் தல் கூட்டம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் தருமபுரி முத்து இல்லத் தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் நாகைபாலு தலைமை வகித் தார். மாநிலக்குழு உறுப்பினர் கவிஞர் நவகவி, மாவட்ட நிர்வாகிகள் சுகந்தி பாஸ்கரன், சிங்காரவேலன், கார்த்தி கேயன், சோ.அருச்சுணன், ராஜசேகரன், மாரியப்பன் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். பின்னர் நடந்த தமுஎகச நிர்வாகிகள் கூட்டத்தில் ஜன.25ஆம் தேதியன்று தருமபுரியில் கலை இரவு விழா நடத்துவது என முடிவெடுக்கப்பட் டது. மேலும், இவ்விழாவை சிறப்பாக நடத்த விழாக்குழு அமைக்கப்பட்டது. விழாக்குழு தலைவராக ஓய்வுபெற்ற மாவட்டகல்வி அலுவலர் இராஜசேக ரன்,செயலாளராக தருமபுரி வட்ட கிளை செயலாளர்  எம்.காரத்திகேயன், பொருளா ளராக ஓய்வுபெற்ற அரசு ஊழியர் அமைப் பின் தலைவர் ஆர்.சுந்தரராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;