கோவை, மே 20 - கொரோனா ஊரடங்கினால் வாழ்வா தாரம் இழந்து நிற்கும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கி வரும் வேளையில் பலர் தபால் நிலையங்களில் கணக்கு தொடங்குவ தற்கு பல மணி நேரம் காத்திருந்த வண் ணம் உள்ளனர். கட்டுமானம், சாலையோர கடைக் காரர்கள் உட்பட பலர் அமைப்பு சாரா தொழிலாளர் நலத்துறையில் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தால் மட் டுமே அவர்களால் கொரோனா நிவாரண மாக 2 ஆயிரம் ரூபாயைப் பெற முடி யும். இந்நிலையில் வங்கிக் கணக்கு இல் லாத பலரால் நிவாரணத் தொகையினை அவர்களால் பெற முடியாத நிலை ஏற்பட் டது. இதனை கருத்தில்கொண்டு கணக்கு இல்லாதவர்கள் உடனடியாக தபால் நிலையங்களில் சேமிப்புக் கணக்குத் தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கோவையிலுள்ள தபால் நிலையங்களில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பலர் சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.