tamilnadu

img

மின்சாரம் தாக்கியதால் தொழிலாளி கவலைக்கிடம்

ஏற்காடு, டிச.13- ஏற்காட்டில், மின் சாரம் தாக்கியதில் போர் வெல் தொழிலாளி படு காயமடைந்து மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.  சேலம், அழகாபுரத்தை சேர்ந்தவர் கணகசபாபதி. இவருக்கு சொந்தமான போர்வெல் வாகனம் உள்ளது. கடந்த சில தினங் களாக ஏற்காட்டில் போர் வெல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வேலை முடிந்ததும் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் இந்த வாகனம்  நிறுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், வியாழனன்று காலை  இந்த வாகனத்தில் பணிபுரியும் தொழி லாளி, சிவகங்கையை சேர்ந்த  சூர்யா (55)  என்பவர் வாகனத்தின் மீது ஏறி வாகன பாகங்கள் சரியாக உள்ளதா என்று பார்த்துக்  கொண்டிருந்துள்ளார்.  அப்போது, வாகனத்தில் இருந்த ஹைட்ராலிக் பாகம் மேலெழுந்து மேலே இருந்த உயரழுத்த மின் கம்பியில் உரசிய தால் போர்வெல் வாகனம் முழுவதும் மின் சாரம் பாய்ந்துள்ளது. அப்போது சூர்யாவின்  மீதும் மின்சாரம் தாக்கியதை கண்ட உடன்  பணிபுரியும் தொழிலாளிகள் மரக் கட்டையை கொண்டு அவரை காப்பாற்றி யுள்ளனர். இந்நிலையில், சூர்யா 108 ஆம்புலன்சு மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு  தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.