tamilnadu

img

சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வாண்கோழிபண்ணைகள்

அகற்ற வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

தருமபுரி, நவ. 25- சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வாண்கோழிபண் ணையை அகற்றக்கோரி பிக்கம்பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம்  பிக்கம்பட்டி கிராமத்தில் பலர் வாண்கோழி பண்ணை வைத்துள்ளனர்.  இந்த பண்ணையில்  முட்டைகள் மூலம் குஞ்சுகள் உற்பத்தி செய்து வருகிறார்கள். இதனால்  அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் மற்றும் ஈக்கள் உற்பத்தியாகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு காய்ச்சல், வயிற்றுப் போக்கு, சுவாசக் கோளாறு போன்ற நோய்களால் அப்ப குதி மக்கள்பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இரவு நேரத்தில் அதிக சத்தத்தை வான்கோழி கள் எழுப்புவதால் தூக்கம் வராமல்  இப்பகுதியில் வசிப்ப வர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே குடியி ருப்பு பகுதியில் இருந்து வாண்கோழிபண்ணையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கிராம சபை கூட்டத்தில் வலி யுறுத்தியும் அதிகாரிகளுக்கு புகார்மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே இவற்றை உடனே கருத்தில் கொண்டு  குடியிருப்பு பகுதியில் இருந்து வாண்கோழிபண்ணையை அகற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் மலர்விழியிடம் மனு அளித்து வலியுறுத்தியுள்ளனர்.