tamilnadu

img

வரதட்சணை கேட்டு பெண் அடித்துக் கொலை?

சேலம், ஏப். 30-சேலத்தில் வரதட்சணை கேட்டுஇளம்பெண்ணை அடித்துக் கொலை செய்ததாக கூறி, இறந்த பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் ரகமதுல்லா. இவரது மகள் ஹசிபாவுக்கும் (26), சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த ஹாமீம் அலி(28) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதன் பின்னர் ஹாமீம் அலி ஹசிபாவை வரதட்சணை கேட்டு தினசரி அடித்து, அவரின் தாயார் வீட்டுக்கு அனுப்பி பணம் மற்றும் நிலம்பெற்று வருமாறு தொடர்ந்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திங்களன்று தாதகாப்பட்டி பகுதியில் உள்ள அவரது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ஹசிபா பிணமாக மீட்கப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அன்னதானப்பட்டி காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஹசிபாவின் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் பெண்ணை அடித்து கொலை விட்டதாகவும், எனவே அவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, ஹசியாவின் தாய் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

;