tamilnadu

img

அன்னூரில் கட்டி முடிக்கப்பட்ட மகளிர் கழிப்பிடம் திறக்கப்படுமா?

 அன்னூர், மே 10-அன்னூரை அடுத்த பொன்னேகவுண்டன் புதூரில்மகளிருக்கான பொதுக்கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டுஆண்டுகளாகியும் திறக்கப்படாடாததால் மிகுந்த சிரமத்திற்குஉள்ளாகி வருகின்றனர்.கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியம் மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சிக்குட்பட்டது பொன்னே கவுண்டன் புதூர். இங்கு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் 2016-17 ஆம் ஆண்டு ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் மகளிருக்கான கழிப்பிடம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட கழிப்பிடம் இன்று வரைதிறக்கப்படாததால் பெண்கள்இயற்கை உபாதைகளைக் கழிக்கமிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள்கூறுகையில், 2018 நவம்பர் மாதத்தில் கழிப்பிடத்தை திறக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து அன்னூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.அப்பொழுது தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் கழிப்பிடம்திறக்கப்படவில்லை. விரைவில் தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்த பின்பு திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் இன்றுவரை திறக்கப்படவில்லை எனக் கூறினர்.இப்பகுதியானது சபாநாயகர் பா.தனபால் வெற்றி பெற்ற அவினாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டது. எனவே சபாநாயகர் தலைமையில் மகளிர்பொதுக்கழிப்பிடம் திறக்கப்படும் என ஆறு மாதம் முன்பு கூறப்பட்டது. இதற்காக கல்வெட்டும் தயார் செய்து வைக்கப்பட்டது. ஆனால் இவ்வாறு தண்ணீரில்லை என திறக்கப்படாத கழிப்பிடத்தை சபாநாயகர் திறந்து வைத்ததாக கல்வெட்டு வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே அப்பகுதியில்சாக்கடை வெளியேற வசதியின்றி குடியிருப்பு பகுதிலேயே தேங்கி நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிவு நீரை வெளியேற்ற முறையான வசதிசெய்து கொடுங்கள் என அப்பகுதிமக்கள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.