tamilnadu

செயற்கை பஞ்சின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா!

கோவை, ஜூன் 26- செயற்கை பஞ்சின் வரி விகிதம் அதிகமாக உள்ளதை சரி செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை என இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்திய ஏற்றுமதி ஏன் வளர வில்லை? என்பது தொடர்பாக இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் அமைப்பின் சார்பில் அவர்களது உறுப்பினர்களிடம் சர்வே ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த சர்வேயில் 320 பேர் கலந்து கொண்டு கருத் துக்களை தெரிவித்துள்ளனர். இத னடிப்படையில் ஏற்றுமதியை அதி கரிப்பது தொடர்பாக டெக்ஸ் பிரனர்ஸ் அமைப்பினர் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ள னர். அந்த அறிக்கையில் கூறியி ருப்பதாவது, சர்வே முடிவுகளின் அடிப் படையில் புது வியாபாரம் குறித்த முனைப்பு ஜவுளி ஏற்றுமதியாளர் களிடம் இல்லை. உற்பத்தித் திற னில் மற்ற நாடுகளைவிட 30 சத விகிதம் பின் தங்கியுள்ளோம். செயற்கை பஞ்சின் வரி விகிதம் அதிகமாக இருக்கிறது. இதைச் சரி செய்ய நாடு தழுவிய அளவில் எந்த ஒரு பெரிய முயற்சியும் எட்டப்படவில்லை. ரூ.500 கோடி முதலீட்டில் சுமார் 40 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை ஜவுளித்துறையினரால் உரு வாக்கிட முடியும். இந்நிலையில், ஏற்றுமதி ரூ.7 ஆயிரத்து 400 கோடி யானால், 1.5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். இவ்வாறு ஜவுளி ஏற்றுமதியாளர்கள் வளர்ச்சியால் வேலையின்மை உருவாக்கும் சவால்களை இந்தியா எதிர்கொள்ளமுடியும்.  எனவே, மத்திய அரசு ஜவு ளித்துறை ஏற்றுமதிக்கான ஒரு வழிகாட்டும் குழுவை அமைக்க வேண்டும். அந்த குழுவினர் ஜவுளி ஏற்றுமதியின் வளர்ச்சிக்காக குறுகிய மற்றும் மத்திய கால தீர் வைக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் கோவை, திருப்பூர், கரூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பெரிய ஜவுளி உற்பத்தி மையங்கள் இருப் பதால் ஒரு இணை செயலாளர் அளவிலான அதிகாரி இங்கே மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வந்து பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும். ஜவுளி பொருட்க ளுக்கு ஒரேமாதிரியான குறைந்த ஜிஎஸ்டி வரி விதிப்பைக் கொண்டு வர வேண்டும்.  பருத்தி விளைச்சலை அதிக ரிக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். ஆயத்த ஆடை நிறுவனங்கள் அமைக்க சிறப்பு உதவித்திட்டங் களை அறிவிக்க வேண்டும். பசுமை முறையில் தயாராகும் ஆடைகளை ஊக்கப்படுத்தி வெளிநாடுகளில் சந்தைப்படுத்த உதவ வேண்டும்.  இந்தியா-யூரேசியா மற்றும் பிற வர்த்தக ஒப்பந்தங்களை வளர்த்து முடிக்க வேண்டும். ஜவுளி ஏற்றுமதி அதிகரிப்பதால் இந்தியா வின் பொருளாதாரத்தை 5 டிரில்லி யன் டாலர்கள் உயர்த்த முடியும். இதுதொடர்பாக மத்திய ஜவுளி  அமைச்சருக்கு கடிதம் எழுதியுள் ளோம். இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.