வாய்மை என்றால் என்ன சொல்லு?
வாயால் தீமை வாராச் சொல்லு!
பொய்யும் வாய்மை ஆகுமா சொல்லு?
போற்றும் நன்மை அளித்தால் சொல்லு!
பொய்யை மறைத்தால் என்ன ஆகும்?
பொய்யது நெஞ்சைச் சுடுவதால் வேகும்!
பொய்யா உள்ளமாய் வாழ்ந்தால் என்ன?
புகழுடை உள்ளம் எல்லாம் மின்ன!
தவறா உண்மைச் சொல்பவர் முன்னே!
தவமும் தானமும் செய்பவர் பின்னே!
அவனியில் பொய்யா திருத்தலின் புகழிலை!
அதுவே நலங்கள் தருமதன் எல்லை!
பொய்யைப் பேசா திருப்பதே அறமாய்ப்
போற்றுக அதைநீ ஆகிடும் உரமாய்!
மெய்யின் தூய்மை நீரே ஆக்கும்
மனதின் தூய்மை வாய்மை சேர்க்கும்!
புறத்தே ஒளிர்வது விளக்கு இல்லை
பொய்யா விளக்கே சான்றோர்க் கெல்லை?
புறத்தே கண்ட உண்மை பலவில்
புகழும் உண்மைக் கீடே இல்லை!