மக்களவையில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., கேள்வி
புதுதில்லி, பிப்.11- மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்ட ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை தொடர்பாக மக்களவையில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பதிலளித்துள்ளார். ஜிஎஸ்டி (GST) இழப்பீடு சம்பந்தமாக மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் எழுப்பிய கேள்விகள் வருமாறு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டதிலிருந்து பல மாநிலங் கள் அதிக வருவாய் பற்றாக்குறையை சந்திக் கின்றனவா, அப்படியானால் அதன் விவரங் களை மாநில வாரியாகவும், மாத வாரியாக வும் தெரியப்படுத்தவும். ஜிஎஸ்டி அமுல்படுத் தப்பட்ட தொடக்கத்திலிருந்தே, மாநில அரசு களுக்கு கொடுக்கப்படவேண்டிய, கொடுக் கப்பட்ட ஜிஎஸ்டி செஸ் திருப்புதல்/ இழப் பீடு விவரங்களை மாநிலங்கள் வாரியாகவும், வருட வாரியாகவும் தேவை. இதோடு ஒவ் வொரு மாநிலத்திற்கும் மாதம் வாரியாக கொடுக்கப்படவேண்டிய நிலுவையிலுள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை, நிலுவைக்கான காரணங்கள் மற்றும் இதனை கொடுப்பதற் கான கால நிர்ணயம் பற்றிய விபரங்களை தெரியப்படுத்தவும்.
மேலும், ஆகஸ்ட் மற்றும் செப். 2019 ஆகிய இரண்டு மாதங்களுக்கு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதன் காரணமாக பல் வேறு மாநிலங்களின் வருவாய் இழப்பை ஈடு செய்ய மத்திய அரசு ரூ.35,298 கோடியை விடுவித்துள்ளது என்பதும், 2019 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இழப்பீடு மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதும் உண்மையா? அப்படியானால், தமி ழகம் உள்ளிட்ட மாநிலங்களின் பெயர்களு டன் ஒவ்வொரு மாநிலத்தின் பங்கு / சதவீதம் உள்ளிட்ட விபரங்களை தெரியப்படுத்தவும். தற்போதும், தொடர்ந்து, எதிர்காலத்தி லும் மாநிலங்களுக்கு அளிக்கப்படவேண்டிய நிலுவையிலுள்ள தொகைகளையும், திரும்ப அளிக்கப்படவேண்டிய தொகைகளையும், அவர்களுக்கு வழங்கிட ஏதேனும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்ற விபரங்கள்? மற்றும் ஜிஎஸ்டி இழப்பீடு பெறும் காலத்தை 2020 க்கு அப்பாலும் நீட்டிக்க பல மாநிலங்க ளும் கோருகின்றனவா அப்படியானால் அந்த விபரங்கள், இது சம்பந்தமான அரசின்முடிவு கள் மற்றும் எதிர்காலத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் ஜிஎஸ்டி இழப்பீட்டை அதி கரிப்பதற்கான முன்மொழிவுகள் ஏதேனும் இருப்பின் அதன் விவரங்களை குறிப்பிட வும்.
ஜிஎஸ்டி-யின் தொடக்க காலத்தில், மதிப்பிடப்பட்டபடி, ஜிஎஸ்டியின் கீழ் வரு வாய் வசூல் அடையப்பட்டுள்ளதா? அப்படி யானால் தற்போதைய தேதிப்படி, மதிப் பிடப்பட்ட தேவை, வசூல் மற்றும் இருப்பு பற்றிய விவரங்கள் மற்றும் தற்போதைய தேதியில், எந்த ஒரு கம்பெனி/ கார்ப்பரேட் நிறுவனத்திடமும் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி நிலுவை தொகை, கம்பெனி /கார்ப்பரேட் வாரியாக குறிப்பிடவும். ஜிஎஸ்டி அடுக்குகள் மற்றும் விகிதங் களை மறுசீரமைப்பது மற்றும் வருவாய் பற்றாக்குறையை கையாள்வதற்கான புதிய வழிமுறை மற்றும் மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி இழப்பீடு ஆகியவற்றை அரசாங் கம் பரிசீலித்து வருகிறதா, அப்படியானால், அதன் விவரங்கள் குறித்து குறிப்பிடவும். பி.ஆர்.நடராஜனின் இக்கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பதி லளித்து பேசுகையில், ஜிஎஸ்டி சட்டம் 2017 (மாநிலங்களுக்கான இழப்பீடு) பிரிவு 7ன் படி மாநிலங்களுக்கான வருவாய் இழப்பு, அதற் கான இழப்பீடு ஆகியவை ஒவ்வொரு இரண்டு மாதங்களின் முடிவிலும் தற்காலிக மாக கணக்கிடப்பட்டு வெளியிடப்படும். ஐந் தாண்டுகள் முடிவில் இந்திய தலைமை தணிக்கை அதிகாரியால் தணிக்கை செய்யப் பட்ட இறுதி வருவாய் கணக்குகள் கிடைக் கப்பெற்ற பின் ஒவ்வொரு நிதி ஆண்டின் இறுதியிலும் இறுதியாக கணக்கிடப்படும் அத்தகைய இழப்பீட்டுத் தொகையை மாநி லங்களுக்கு வழங்குவதற்காக ஜிஎஸ்டி சட்டம் (மாநிலங்களுக்கான இழப்பீடு) 2017ன் பிரிவு 8ன் படி, சில சொகுசு மற்றும் குறை பாடுள்ள பொருட்களுக்கு இழப்பீட்டு செஸ் விதிக்கப்படுகிறது. இந்த இழப்பீட்டு செஸ் தொகையானது, இந்திய பொதுக் கணக்கின் ஒரு பகுதியான, காலாவதியாகாத நிதியமான சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு நிதி யில் வரவு வைக்கப்படும். இதன்படி, மொத்த ஜிஎஸ்டி இழப்பீடு 2017-2018 ரூ.48785. 35 கோடியும், 2018-2019 ரூ.81141. 41 கோடியும், 2019-2020 ரூ.81043 கோடியும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி சட்டம் (மாநிலங்களுக்கான இழப் பீடு) 2017ன் படி, ஜிஎஸ்டி அமுல்படுத்திய தன் காரணமாக, ஏற்பட்ட இழப்பை ஈடுசெய் வதற்கான ஏற்பாடுகள் ஜூன் 2022 வரை 5 ஆண்டுகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. சரக்கு மற்றும் சேவை சம்பந்தமான ஜிஎஸ்டி விகிதங்கள், ஜிஎஸ்டி கவுன்சிலால் எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ, அப்போது நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது இது சம்பந்தமாக எந்த முன் மொழிவுகளும் அரசிடம் இல்லை. இவ்வாறு மத்திய அமைச்சர் ஸ்ரீ அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்தார்.