tamilnadu

img

நலவாரிய அலுவலகத்தில் நிரந்தர அலுவலர்களை நியமித்திடுக

கோவை, ஆக. 1– நலவாரிய அலுவலகத்தில் நிரந்தர அலுவலர்களை நிய மித்திட என வலியுறுத்தி சிஐடியு சங்கத்தினர்  கோவையில் நலவா ரிய அலுவலகத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.  அமைப்புசார தொழிலாளர் நலவாரிய அலுவலக செயல்பாடு களை மேம்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள கேட்பு மனுக் களுக்கான பணப்பயன்களை உட னடியா வழங்க வேண்டும். நல வாரிய பணப்பயன்கள் கணிச மாக உயர்த்தப்பட வேண்டும். முத்தரப்பு குழுக்களை உருவாக்கி மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு கூட்டம் நடத்தப் பட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து கோவை  நலவாரிய அலுவலகம் முன்பு  சிஐடியு சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு கட்டு மான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கே.மனோகரன், தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி ஆகி யோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில துணை தலைவர் எஸ்.ஆறுமுகம் மற்றும் வி.பெரு மாள், எஸ்.மூர்த்தி, என்.செல்வ ராஜ், பி.சந்திரன், பி.கே.சுகுமா ரன், ஆர்.பழனிசாமி, இஎன்.ராஜ கோபால், ஏ.எல்.ராஜா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங் கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நலவாரிய அதிகாரிகளி டத்தில் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.