கோவை, அக்.8- மலேசியாவில் நடந்த சிலம்பம் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப்பை வென்று கோவை திரும்பிய சிலம்பாட்ட வீரர்களுக்கு புலியகுளம் காவல் சிறுவர்-சிறுமியர் மன்றம் சார்பில் காவல்துறையினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை மலேசியாவில் உள்ள பினாங்கு மாநிலத்தில் உலக சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இந்த சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டியில் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் ஒற்றைச் சிலம்பம், இரட்டை சிலம்பம், ஒற்றை சுருள் வீச்சு, இரட்டைச் சுருள் வீச்சு, மான் கொம்பு, கம்படி பாடம், வாள்வீச்சு உள்ளிட்ட பல் வேறு விளையாட்டுகள் இந்த போட்டியில் இடம் பெற்றிருந்தன. இதில் கோவை மாவட்டத்தின் சார்பில் புலியகுளம் சிலம்பாலயாகுழுவினர் ஒருங்கிணைப்பாளர் செல்வ குமார் தலைமையில் 8 பேர் கலந்து கொண்டு 8 தங்கம், 3 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 19 பதக் கங்களை வென்றுள்ளனர். இதனையடுத்து பதக்கங்களோடு செவ்வாயன்று கோவை திரும்பிய வீரர்களுக்கு கோவை ரயில்நிலையத் தில் மாநகர காவல்துறை சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல் காவல் உதவி ஆணையர் செட்ரிக் மனுவேல், ராமநாதபுரம் காவல் நிலைய ஆய்வா ளர் லதா, உதவி ஆய்வாளர் ஞானசேகரன், தலைமைக் காவலர் ஆனந்த் ஆகியோர் வீரர்களுக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.