சேலம், மே 29-இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் அரசு பள்ளிகளை பாதுகாக்கக்கோரி நடைபெற்று வரும் சைக்கிள் பிரச்சார குழுவினருக்கு சேலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அரசு பள்ளிகளை மூடுவதை கைவிட வேண்டும். அரசு பள்ளிகளை பாதுகாத்து, பலப்படுத்திட வேண்டும். ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள கல்வி உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், கன்னியாகுமரி ஆகிய நான்கு முனைகளில் இருந்து திருச்சி நோக்கி 1500 கிலோ மீட்டர்சைக்கிள் பிரச்சார பயணம் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக, கோவையில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் க.நிரூபன் சக்கரவர்த்தி தலைமையில் புறப்பட்ட சைக்கிள் பிரச்சார பயணக்குழு புதனன்று சேலம் மாவட்டத்திற்கு வருகை புரிந்தது. இக்குழுவினருக்கு சேலம் ஜங்ஷன் சூரமங்கலம், சோனா கல்லூரி, சேலம் அரசு இருபாலர் கலைக் கல்லூரி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.இந்நிகழ்வில், மாணவர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் காவியா, மாநில குழு உறுப்பினர்கள் தினேஸ் ராஜா, சம்சீர் அகமது, வினிசா, இளவரசன், சேலம் மாவட்டதலைவர் கே.பகத்சிங், மாவட்ட செயலாளர் கவின் ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டசெயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.உதயகுமார், எம்.சேதுமாதவன், எம்.குணசேகரன், வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.கணேசன், மாநில குழு உறுப்பினர் எம்.கற்பகம், பாலர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் கே.ஜோதிலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக, இந்த பிரச்சார குழுவிற்கு அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் வெற்றிவேல் ஆயிரம் ரூபாய் நிதியளித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.