tamilnadu

img

தொழிலாளர் நல சட்டங்களை சீர்குலைக்கும் சர்வாதிகாரத்திற்கெதிராக வீறு கொண்டு எழுவோம்

கோவை, டிச. 1–  தொழிலாளர் நலச்சட்டங்களை சீர்குலைக்கும் சர்வாதிகாரத்திற்கு எதிராக வீறு கொண்டு எழுவோம் என அ.சவுந்தரராசன் அழைப்பு விடுத்தள்ளார். சிஐடியு அகில இந்திய மாநாடு சென்னையில் ஜனவரி 27 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி கோவையில் சிஐடியு மாவட்டக்குழுவின் சார் பில் நிதியளிப்பு சிறப்பு பேரவை ஞாயிறன்று நடைபெற்றது. காட்டூர் மில் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் தலைமை தாங்கினார். மாநாட்டு செய்தியை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் நடைபெறும் ஏற்பாடு கள் குறித்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார். இப்பேரவை யில் பங்கேற்ற சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன், மாநில செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.  முன்னதாக அ.சவுந்தரராசன் பேசுகையில், மோடியின் ஆட்சி யில் ஏற்பட்டுள்ள வேலையின்மை, பொருளாதார நெருக்கடி, விவசாயி களின் தற்கொலைகள், தொழிலா ளர் நலச்சட்டங்களை சீர்குலைத்து வருகிறது. பெருமுதலாளிகள் ஆட்சி யாளர்களை பார்த்து, பணிநிரந்த ரம், பஞ்சப்படி உள்ளிட்டவைக ளுக்கே இடமில்லை என சொல்கி றார்கள். குறைந்தபட்ச ஊதியம் கூட நீங்கள் ஏன் நிர்ணயிக்கிறீர்கள். நாங்கள் எதை சம்பளமாக கொடுக்க வேண்டும் என்பதை நாங்களே முடிவு செய்வோம். இதனை அரசு சட்டமாக்கவே கூடாது. எந்த தொழிலாளியையும் நிறுவனம் நினைத்தால் வைத்துக் கொள்ளலாம், வேண்டாம் என்றால் விரட்டியடிப்போம். எந்த பாதுகாப் பும் தொழிலாளிகளுக்கு இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே அவர்க ளது கோரிக்கையாக உள்ளது. இப்போது உள்ள சட்டங்களே தொழிலாளிகளுக்கு பாதுகாப் பில்லை என்பதுதான் உண்மை. ஆனால் இதுவும் அவர்களை உறுத் துகிறது. அரசுக்கும் முதலாளிகள் சொல்வதை கேட்க ஆசைதான். ஆனால் இதனையெல்லாம் முறிய டித்ததுதான் நம்முடைய போராட் டங்களின் சாதனை.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இடதுசாரிகள் 66 பேர் இருந்த காரணத்தினால் தான் நூறு நாள் வேலை திட்டம் போன்றவை ஏற்படுத்தப்பட்டு கிராமப்புற வறுமை ஒழிப்பிற்கு பேருதவியாக இருந்தது. அதனை நகரத்திற்கும் விரிவுபடுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்பி வருகி றோம். ஆனால் தற்போது நூறு நாள் வேலை திட்டத்திற்கான நிதியையும் வெட்டி சுருக்கி வருகின்றனர்.  தனிப்பெரும்பான்மையான இந்த பாஜக ஆட்சியில் தான் 70  லட்சம் காஷ்மீர் மக்களை 120 நாட்கள் திறந்தவெளி சிறையில் தள்ளியுள்ள கொடுமை நடைபெற் றுள்ளது. இத்தகைய சர்வாதிகா ரத்தனம் நாளை தொழிற்சங்க இயக்கங்களுக்கு வராது என்பதற்கு என்ன உத்தரவாதம். மத்தியிலும், மாநிலத்திலும் வரிசையாக இவர் கள் எடுக்கிற நடவடிக்கைகள் அனைத்தும் சர்வாதிகாரத்தை நோக்கியே போகிறது.  சிலம்பத்தில் தடுப்பு ஆட்டம் என்று ஒன்று உண்டு. அது கடைசி வரையில் அடிப்பவரை தடுத்துக் கொண்டே விளையாடுவது. அது போலத்தான் இதுவரை நாம் தடுப்பு ஆட்டத்தைத்தான் செய்து கொண்டிருந்தோம். எத்தனை காலத்திற்கு இதனை தொடர முடியும்? இனி தாக்குதலுக்கான ஆட்டத்தை தொடர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அத்த கைய சக்தி தொழிலாளி வர்க்கத் திற்கு மட்டுமே சாத்தியம்.  இதனை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த வேண்டிய அவசியம் நம் முன்னால் உள்ளது. அத்தகைய போராட்டத்தை நோக்கித்தான் நாம் செல்கிறோம். கடந்த வேலை நிறுத்த போராட்டத்தை காட்டி லும் இரண்டு, மூன்று மடங்காக தொழிலாளி வர்க்கம் வீறுகொண்டு எழுகிற போராட்டமாக ஜனவரி 8 வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றியடையச்செய்வோம். அதேபோல தொழிலாளி வர்க் கத்தின் நம்பிக்கை சிஐடியு என்பதை பறை சாற்றும் வகையில் சென்னை யில் நடைபெறும் சிஐடியு அகில இந்திய மாநாட்டை கடும் உழைப் பைச் செலுத்தி வெற்றிகரமாக்கிட  அனைவரும் உழைத்திடுவோம் என்றார். முன்னதாக இப்பேரவையில் பங்கேற்ற சிஐடியுவின் இணைக்கப் பட்ட சங்கங்களின் நிர்வாகிகள் முதல் தவணையாக ரூ.3 லட்சத்து 34 ஆயிரத்து 900 ஆயிரம் ரூபாய் அகில இந்திய மாநாட்டு நிதியினை சிஐடியு மாநில தலைவர் மற்றும் செயலாளரிடம் வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் எஸ்.ஆறுமு கம், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள், கே.மனோகரன், பி.சந்திரன், என்.செல்வராஜ், ஏ.எல்.ராஜா, ஏ.எம்.ரபீக் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.