tamilnadu

img

பார்ப்பனியத்தை சமூக, பண்பாட்டு தளங்களிலும் எதிர்ப்போம்

கோவை, ஜூலை 8- பார்ப்பனியத்தை அரசியல் தளத்தில் மட்டும் எதிர்ப்பது வெற்றியல்ல. சமூக, மத, பண் பாட்டு தளங்களிலும் எதிர்க்க வேண்டும் என திராவிடர் இயக்க தமிழர் பேரவை அமைப்பின் தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்தார். கோவை நவ இந்தியா பகுதி யில் உள்ள தனியார் உணவக கூட்டரங்கில் திராவிடர் தமிழர் கட்சியின் சார்பில் எழுத்தாளர் இனியன் எழுதிய “பீமா கோரே கான் “ புத்தக வெளியீட்டு விழா ஞாயிறன்று நடைபெற்றது. விழா விற்கு திராவிடத்தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் பீமா கோரோகான்  புத்தகத்தை திராவிட இயக்க தமிழர் பேரவை அமைப்பின் தலைவர் சுப.வீரபாண்டியன், வெளியிட்டார். திராவிடத் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண் டனர். இதைத்தொடர்ந்து தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில  நிர்வாகி பேராசிரியர் சுந்தர வள்ளி, தபெதிக பொது செயலா ளர் கு.ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.  முன்னதாக, திராவிடர் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் புத்தகத்தை வெளியிட்டு பேசுகையில், பார்ப்பனியத்தை தலித்துகள் பீமா ஆற்றங்கரையில் உள்ள கோரேகான் என்ற இடத்தில் வென்ற இடம் என்பதால் பீமா  கோரேகான் என்று இந்த புத்த கத்திற்கு பெயர் வைத்திருக்கின் றனர். 2018 ல் கோரேகானில் ஏற்பட்ட கலவரத்திற்குப் பின்பே இந்த வரலாற்றை நான் தெரிந்து கொண்டேன். பார்ப்பனியத்தை அரசியல் தளத்தில் மட்டும் எதிர்ப் பது வெற்றியல்ல. சமூக, மத, பண்பாட்டு தளங்களிலும் எதிர்க்க வேண்டும்.  வடமாநிலத்தவர் இங்கே இப்போது அதிகமாக ஊடுருவி இருக்கின்றனர். இவர்களுக்கா கவே ஓரே நாடு, ஓரே ரேஷன் கார்டு என்பது கொண்டு வரப்படு கின்றது. விரைவில் அரிசியின் அளவு குறைக்கப்பட்டு, கோதுமை யின் அளவு கூட்டப்படும். வட மாநிலத்தவர் இங்கு அதிகம் இருப்பது ஏதேச்சையானது அல்ல. தாமரை தமிழகத்தில்  மலர வேண்டும் என்பதற்காகத் திட்ட மிடப்பட்டதே வடமாநிலத்த வரின் ஊடுருவல்.  திராவிடம் என்பது நிலம், மொழி, இனம் போன்றவை இல்லை. அது சமூக நீதி. இதைக் குலைக்க பல்வேறு தளங்களில்  பல பெயர்களில் மோதுகின்றார் கள். திராவிடத்தை அழிக்க வேண்டும் என்ற அவர்களின்  நோக்கம் ஒன்று. ஆனால் வழி முறைகள் மட்டும் வேறு என  அவர் குற்றம் சாட்டினார்.  முன்னதாக, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை செயலாளர் யு.கே.சிவஞானம், எழுத்தாளர் பாமரன், புரட்சிகர இளைஞர் முன்ன ணியின் மலரவன், திவிக தலை வர் நேருதாஸ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை வாழ்த்தி உரை யாற்றினர். நிகழ்வில் நேர்மை யான சமூக செயற்பாட்டாளர் விருதுகளை ச.பாலமுருகன், அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகி ப.செல்வ ராஜுக்கும், சிறந்த படைப்பாளிக் கான விருது தமுஎகச மாநிலக் குழு உறுப்பினர் அ.கரீம் ஆகியோ ருக்கு வழங்கப்பட்டது.