tamilnadu

img

வரட்டுபள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு

ஈரோடு, மார்ச் 6- வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் மானாவாரி பயிர்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடர்ந்த வனப்பகு தியில் வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணையில் தற்போது 33 அடி கொள்ளளவுடன் 130  மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதைக்கருத்தில் கொண்டு விவசாயிகள், பாசன பகுதிக்கு தண்ணீர் திறக்கக்கோரி மாவட் நிர்வாகத் திடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, வரட்டுப் பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு ஜூன் 13 ஆம் தேதி வரை தண்ணீர்  திறக்கப்பட்டது. இதனை சட்டமன்ற  உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் திறந்து வைத்தார். இதில், பொதுப்பணித்துறை அதிகாரி சுலை மான், ஒன்றியத் தலைவர் வளர்மதி மற்றும் விவசா யிகள் பலர் கலந்து கொண்டனர். தண்ணீர் திறப்பால் 2,924 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக  பயன்பெறும். எள், சோளம், நிலக்கடலை, மக்காச் சோளம் உள்ளிட்ட மானாவாரி பயிர்களை விவசா யம் செய்து பயன்பெறு பொதுப்பணித்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.