tamilnadu

img

தலித் ஊராட்சித் தலைவரை அவமதித்தோர் மீது வன்கொடுமை வழக்கு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், ஆக. 21- ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலித் பெண் தலைவரை அவமதித்த சாதி ஆதிக்க சக்தியினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வலியுறுத்தி வெள்ளியன்று (ஆக.21) பொன்னேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலித் பெண் தலைவரை நிர்வாக பணிகளை மேற்கொள்ள விடாமல் தடுத்த ஊராட்சி செயலர் சசிக்குமாரை பணி நீக்கம் செய்ய வேண்டும், ஊராட்சி துணைத் தலைவர் கணவர் விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர் கணவர் அரிதாஸ் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும், புதியதலைமுறை செய்தியாளர் எழிலை தாக்கிய சாதி ஆதிக்க  சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.விஜயன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் எஸ். எம்.அனீப், பகுதி செயலாளர் இ.தவமணி, வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.மதன் உள்ளிட்டோர் பேசினர்.