tamilnadu

img

தருமபுரியில் கால்நடைகளுக்கு கோமரிநோய் தடுப்பூசி

தருமபுரி, பிப்.28- தருமபுரியில் கால்நடைகளுக்கு கோமரிநோய் தடுப்பூசி முகாம் துவக்கி வைக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், காரிமங் கலம் வட்டம், கெரகோடஅள்ளியில் வெள்ளியன்று கால்நடை பரா மரிப்புத் துறையின் சார்பில் முதல்  சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இவ்விழா விற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தலைமை வகித்தார். உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் முகாமை துவக்கி வைத்து  பேசுகையில், நோய் பாதிக் கப்பட்ட கால்நடைகளுக்கு பால் கறக்கும் திறன், சினை பிடிக்கும் தன்மை மற்றும் வெப்பம் தாங்கும்  திறன் முதலியன மிகவும் பாதிக்கப் படும். இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும். இதை தவிர்க்க அரசு நிதி உதவி யுடன் இலவசமாக ஆண்டிற்கு இரு முறை கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது.  இம்முறை தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் முதல்  சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி பிப்.28ஆம் தேதி முதல் மார்ச்  19ஆம் தேதி வரை தொடர்ச்சி யாக 21 நாட்கள் மேற்கொள்ளப் படவுள்ளது.

தடுப்பூசி போடுவதால் பால்குறையும் மற்றும் சினை மாடு களில் கருச்சிதைவு ஏற்படும் என்பது மிக தவறான கருத்தாகும். ஆகவே, இந்நோயிலிருந்து கால்நடை களை பாதுகாக்க 100 சதவிகிதம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப் படவேண்டும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை தடுப்பூசி முகாம் நடைபெறு கிறது. இம்முகாமை விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களுடைய கால்நடைகளுக்கு இத்தடுப்பூசியை கட்டாயம் போட வேண்டும்.  இம்மாவட்டத்தில் 3 லட்சத்து  85 ஆயிரத்து 505 பசு மற்றும் எருமை யினங்களுக்கு தடுப்பூசி போடப் பட உள்ளது. இத்தடுப்பூசி பணி  மேற்கொள்ள 3லட்சத்து 88 ஆயிரம்  டோஸ் கோமாரி நோய் தடுப்பூசி  மருந்து இருப்பில் வைக்கப்பட் டுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள  அனைத்து ஊராட்சிகளில் தடுப்பூசி  பணி மேற்கொள்ள 84 தடுப்பூசி  பணி குழுவினர் நியமிக்கப்பட் டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.  முன்னதாக, இந்நிகழ்வில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்  சாந்தி பெரியண்ணன், மண்டல  இணை இயக்குநர் கால்நடை பரா மரிப்புத்துறை மரு.இராஜேந்திரன், உதவி இயக்குநர்கள் மரு.வேடியப்பன், மரு.சண்முகசுந்தரம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப் பினர் காவேரி, வட்டாட்சியர் கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.