tamilnadu

குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி

அவிநாசி, ஜூன் 30- அவிநாசி அடுத்த பொங்கு பாளையம் ஊராட்சியில்  குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப் பினரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனியன்று மனு அளிக்கப்பட்டது. திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் வளர்ச்சிப்பணிகள் குறித்து திருப்பூர்  வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் ஆய்வு மேற்கொண் டார். அப்போது பொங்கு பாளையம் ஊராட்சியில் குடிநீர்  பிரச்சனையை தீர்க்க வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி சார்பில் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் அப்புச்சாமி தலைமையில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியி ருப்பதாவது, பொங்கு பாளையம்  ஊராட்சிக்குட்பட்ட பரமசிவம் பாளையம், மாரப்பன் பாளையம்,  புது பள்ளிபாளையம், காளம் பாளையம் உள்ளிட்ட  கிராம பகுதி களுக்கு குடிநீர் மேம்பாட்டுக் கழகம்,  திருப்பூர் மூன்றாவது குடிநீர் திட்டம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பெருமாநல்லூர் தரைமட்ட தொட்டியின் மூலம் 2  லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் குடிநீர்  வழங்க வேண்டும். ஆனால் தற் போது பெருமாநல்லூர் தரை மட்ட தொட்டியிலிருந்து பொங்கு பாளையம் ஊராட்சிக்கு செல்லும்  குடிநீர் குழாயில் சிலர் சட்டவிரோத மாக  குடிநீர் திருடி வருகிறார்கள். இதனால் குடிநீர் 40 ஆயிரம் லிட்டர்  கூட கிடைப்பதில்லை. இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டபடி குடிநீர்  வழங்க வாய்ப்பில்லை எனக் கூறு கின்றனர்.  இந்நிலையில் குடிநீர் பிரச்ச னைக்கு தீர்வு காண்பதற்கு பெருமா நல்லூர் தரைமட்ட தொட்டியி லிருந்து பொங்குபாளையம், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தரைமட்ட  தொட்டிவரை குழாய் அமைத்து 2  லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் குடி நீரும், கூடுதலாக இரண்டு லட்சம்  குடிநீர் வழங்க வேண்டும். பொங்கு பாளையம், காளம்பாளையம் கிராம  பகுதிகளுக்கு 25 நாட்களுக்கு ஒரு  முறைதான் குடிநீர் வருகிறது. இப் பகுதிக்கு வழங்க வேண்டிய குடி நீரை மாநகராட்சி எடுத்துக்கொள் வதால், குடிநீர் கிடைப்பதில் சிக்கல்  ஏற்பட்டுள்ளது.இதனால் பாண்டியன் நகர் தரைமட்ட தொட்டி யிலிருந்தும், மேட்டுப்பாளை யத்தில் இருந்து வரும் இரண்டா வது குடிநீர் திட்டத்தின் மூலம்   பொங்குபாளையம், காளம் பாளையம் பகுதிகளுக்கு 50 ஆயிரம் லிட்டர் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக குடிநீர் பிரச்சனை குறித்து ஊராட்சி ஒன்றிய ஆணை யாளர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும்  குடிநீர் வடிகால் வாரிய அதி காரிகளிடம் பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் பல முறை மனு கொடுக்கப் பட்டன. ஆனால் எவ்வித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.  தகவ றிந்த சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 2 லட்சத்து 30  ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்கப் படும் எனவும், இக்கோரிக்கை களை ஒரு வருடத்திற்குள் நிறை வேற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை  உரிய நடவடிக்கை  எடுக்கப்படவில்லை. இந் நிலையில் ஊராட்சிகளில் ஆய்வு  மேற்கொண்ட சட்டமன்ற உறுப் பினர் விஜயகுமாரிடம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.