tamilnadu

ஆபாச படங்கள் முகநூலில் பதிவேற்றம்: போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

கோவை, ஜூலை 26-  குழந்தைகளின் ஆபாசபடங்களை முகநூலில் பதிவேற் றம் செய்ததாக விமான நிலைய பணியாளர் போக்சோ சட் டத்தில் கைது செய்யப்பட்டார்.  கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் சுனில்குமார்(48). இவர், கோவை விமான நிலை யத்தில் உள்ள கேன்டீனில் வேலை பாரத்து வருகின்றார். இந்நிலையில், சுனில்குமார் முகநூலில், குழந்தைகள் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தது தொடர்பாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் இருந்து தகவல் கிடைத்தது. இதன் பேரில், செட்டிபாளையம் காவல் துறையினர் ஐபி முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை வைத்து சுனில்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போனை பறி முதல் செய்தனர். சுனில் குமார் மீது போக்சோ உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

;