tamilnadu

img

ஈரோடு சிஎன்சி கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடுக

மாணவர் சங்கத்தின் சிறப்பு பேரவை வலியுறுத்தல்

ஈரோடு,செப்.11- ஈரோடு சிஎன்சி கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம் படுத்த வேண்டும் என இந்திய மாண வர் சங்கத்தின் சிறப்பு மாவட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. இந்திய மாணவர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் ஈரோட்டில் புதனன்று சங்கத்தின் மாவட்டக்குழு உறுப் பினர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது.  மாநில உதவித் தலைவர் எம்.கண்ணன் சிறப்புரை யாற்றினார். மாதர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் ஆர்.கோமதி, வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.சசி, மாணவர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முக சுந்திரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் எம்.வினிஷா வேலை அறிக்கையை முன்வைத்து பேசினார்.

தீர்மானங்கள்

முன்னதாக இப்பேரவையில் ஈரோடு சிக்கைய நாயக்கர் கல் லூரியில் சற்றுச்சுவர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.  பேராசிரியர் காலிப்பணியிடங் களை உடனடியாக நிரப்ப வேண் டும். கல்வி உதவித்தொகை படி வத்திலுள்ள மாணவர்களின் தனி நபர் உரிமைகளை மறுப்பதற்கான வாசகங்களையும், உறுதி மொழி களையும் நீக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் அடிப்படை வசதிகளை பள்ளி, கல்லூரி நிர் வாகம் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும். கல்வி நிலை யங்களின் அருகே உள்ள மதுபானக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்

இதனையடுத்து, மாணவர்  சங்கத்தின் புதிய மாவட்ட தலை வராக எம்.வினிஷா, செயலாளராக கோ.கோபிகிருஷ்ணன் மற்றும் 8 பேர் கொண்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், 17 பேர் கொண்ட மாவட்டக்குழு கொண்ட புதிய நிர் வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.