tamilnadu

img

புதிய கல்வி கொள்கையைக் கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஆக. 1- பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தின் சார்பில் ஈரோடு வாசவி கல்லூரி அருகில் புதிய கல்வி கொள்கையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. புதிய கல்வி கொள்கை வரைவா னது, மாணவர்களின் எதிர்காலத்தை பாழக்கும் விதமாக அமைந்துள்ளது. இதனை உடனே திரும்ப பெற வேண் டும். கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி நிலை மேம்பாடு, ஆசிரியர்களின் மேம் பாடு தேதியில் இருந்து பணப்பயனு டன் வழங்க வேண்டும். கல்லூரி ஆசிரியர்கள் 01.01.2016 க்குப் பின் உயர்கல்வி தகுதியான எம்.பில், பிஎச்டி முடித்த ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதியான ஊக்க ஊதிய உயர்வினை வழங்க வேண்டும். பல் கலைகழக மானியக்குழு வழங்கியுள்ள புத்தாக்க/புத்தொளி பயிற்சிக்கான கால நீட்டிப்பை 31.12.2019 வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். கல்லூரி கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள மூத்தோர் மற்றும் இளையோருக்கான ஊதிய முரண்பாடினை வழங்க மறுக்கும் இயக்குனர் செய்முறை யைத் திரும்பப் பெற வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஈரோடு தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். 50 க்கும் மேற் பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்ட னர்.