திருப்பூர், ஆக. 25 – பொங்கலூர் ஒன்றியம் வாவி பாளையம் பகுதியில் உயர் மின் கோபுர நிலஅளவை பணிக்கு எதிர்ப் புத் தெரிவித்த பெண்கள் உள்ளிட்ட விவசாயிகளிடம் அத்துமீறி அராஜ கமாக செயல்பட்ட திருப்பூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரனை பணி இடை நீக்கம் செய்து துறைரீதியான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று விவசா யிகள் கண்டனக் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். கடந்த வியாழக்கிழமை வாவி பாளையம் காளியப்பகவுண்டன் புதூர் பகுதியில் விவசாய விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு நில அளவை செய்வ தற்காக பவர்கிரீட் மற்றும் வருவாய்த் துறையினர் வந்தனர். விவசாய விளைநிலங்களில் நில அளவை செய்வதற்கு சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் உள்ளிட்ட விவ சாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது பெரும் காவல் படையுடன் பாதுகாப்புக்கு வந்திருந்த திருப்பூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் குணசேகரன் விவசாயிகளிடம் சட்ட விதிமுறைகளை மீறி அராஜகமாக நடந்து கொண்டார். பெண்களிடமும் மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி வசைபாடியதுடன், மிரட்டி காவல் துறையினரைக் கொண்டு வலுக்கட்டாயமாக கைது செய்தார். இந்நடவடிக்கை விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத் தியது. இதையடுத்து ஞாயிறன்று வாவிபாளையத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி வரதராஜன் தோட்டத்தில் உயர் மின்கோபுர எதிர்ப்பு விவசா யிகள் கூட்டியக்கத்தின் சார்பில் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் இந்த வட்டாரத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மூத்த விவசாயி வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், திருப் பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் ஆகியோர் பங்கேற்று விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தை தற்சார்பு விவசாயிகள் சங்க நிர்வாகி கி.வே.பொன்னையன் முன் மொழிந்தார். இதில் கடந்த 22, 23 ஆகிய தேதி களில் வாவிபாளையம் காளியப்பக வுண்டன் புதூர் பகுதியில் உயர் மின் கோபுரங்களுக்கு நில அளவை செய்ய பவர்கிரீட் மற்றும் வரு வாய்த் துறையினர் அத்துமீறி விவ சாயிகள் விளைநிலங்களில் நுழைந்த னர். அப்போது சிவசுப்பிரமணியம் என்பவரது மனைவி பானுமதி தனது இரண்டரை வயது குழந்தையுடன் அமர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தபோது, குழந்தையை வலுக்கட்டாயமாக அவரிடம் இருந்து காவல் துறையி னர் பறித்து, பானுமதியை கைது செய்தனர்.
அதேபோல் ஈஸ்வரன் என்பவரது மனைவி சிவகாமி இருசக்கர வாகனத் தில் அந்த பாதை வழியாக சென்ற போது அவரையும் தடுத்து நிறுத்தி அவரது வாகனத்துடன் கீழே தள்ளி அநாகரிகமாகவும், அராஜகமாகவும் நடந்து கொண்டனர். இப்பகுதியைச் சேர்ந்த பாரம்பரியம் மிக்க குடும் பத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடா சலத்திடம் ஏடிஎஸ்பி குணசேக ரன் மிக மோசமான முறையில் நடந்து கொண்டார். 63 விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்து பெற்ற இலவச மின்சாரத்தை ரத்து செய்வேன் என் றும், வயதில் மூத்தவரை ஒருமையில் பேசியும் ஆணவத்துடன் குணசேக ரன் நடந்து கொண்டார். பல்வேறு வகையில் அத்துமீறி, அவமானப்படுத் தியதுடன், கைது செய்யப்பட்ட பெண்களை வாகனத்திலேயே சுற்றி வந்து அலைக்கழித்ததுடன், அவர் களை சிறுநீர் கழிக்கக்கூட அனு மதிக்காமல் சட்ட விதிமுறைகளை யும், மனித உரிமையையும் மீறி காவல் துறையினர் செயல்பட்டனர். காவல் துறையின் இந்த அத்துமீறிய அராஜகத்திற்கு இக்கூட்டத்தில் வன்மையான கண்டனம் தெரிவிக் கப்பட்டது. ஆணவத்துடன் நடந்து கொண்ட ஏடிஎஸ்பி குணசேகரனை உடனடியாக பணி இடை நீக்கம் செய்வதுடன், அவர் மீது துறைரீதி யான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் இக்கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேற்படி அத்துமீறல்கள் காட்சி ஊடகங்களிலும் வெளி வந்துள்ள நிலையில் அவற்றையே ஆதாரமாகக் கொண்டு குணசேகரன் மீதும், காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. அத்துடன் திங்களன்று (இன்று) திருப்பூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடமும் இது குறித்து உயர் மின்கோபுர எதிர்ப்புக் கூட்டியக்கத்தின் சார்பில் புகார் கடிதம் அளிப்பது என்றும் இக்கூட் டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். பல்வேறு விவசாய இயக்கத்தின் நிர்வாகிகள் உரை யாற்றினர். கூட்டியக்க ஒருங்கி ணைப்பாளர் சாரதி நிகழ்வை ஒருங்கி ணைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் எஸ்.ஆர்.மதுசூத னன், ஏ.எம்.முனுசாமி, ஆர்.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறை வாக உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் கு.செல்லமுத்து நிறைவுரை ஆற்றினார்.