tamilnadu

img

கட்டிமுடிக்கப்பட்ட அரசு வேளாண் குளிர் பதனக்கிடங்கு விவசாயிகளுக்கு பயனில்லாமல் உள்ள அவலம்

மேட்டுப்பாளையம், பிப். 19-  மேட்டுப்பாளையத்தில், கட்டி முடித்து ஏழாண்டுகளா கியும் திறக்கப்படாமல் உள்ள அரசு வேளாண் குளிர் பதனக் கிடங்கு, செயல்பாடின்றி அவலநிலையில் உள்ளது கோவை மாவட்டம், மேட்டுப்பாளயத்தில் ரூ. 8 கோடி  செலவில் கட்டி முடிக்கப்பட்ட வேளாண் விளை பொருட் களை பதப்படுத்தி விற்பனை செய்யும் மையம் கடந்த 7 ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட் டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் விளையும் மலைக்காய்க றிகள் மற்றும் உள்ளூரில் விளையும் நாட்டுக்காய்கறிகள் மேட்டுப்பாளையத்தில் உள்ள காய்கறி மண்டிகளுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின் றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் இங்கிருந்து காய்கறிகள் ஏற்றுமதி செய் யப்பட்டு வருகின்றன. இந்த விவசாய விளை பொருட்களை இருப்பு வைத்து விற்பனை செய்ய விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி செல வில் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர் பதனக் கிடங்கு, ரூ. 2 கோடி செலவில் தரம் பிரிக்கும் கூடம், பத்து வணிக வளாக கடைகள், ஏல கொட்டகை, வாழைத்தார் பதப்படுத்தும் மையம் மற்றும் அலுவலகம் கட்டப்பட் டது. இந்நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு கட்டி முடிக் கப்பட்ட இவ்வேளாண் மைய கட்டிடம் இதுவரை திறக்கப் படவில்லை. பூட்டியே கிடப்பதால் விவசாயிகளுக்கு பய னற்று அதன் கட்டமைப்புகள் சேதமடையும் சூழல் ஏற்பட் டுள்ளது. இது குறித்து வேளாண்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, குளிர்பதனக்கிடங்கு மற்றும் வணிக வளாகத்தை திறக்க நடவடிக்கை எடுக் கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.