சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
மேட்டுப்பாளையம், அக்.21- கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த உதகை மலை ரயில் சேவை மீண்டும் திங்களன்று துவங்கியதையடுத்து, சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பய ணம் மேற்கொண்டனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி நீலகிரி மலைரயில் இயக் கப்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இம்மலை ரயி லில் பயணித்தபடி நீலகிரி மலை யின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந் நிலையில் கடந்த ஒரு வார கால மாக மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பொழிந்தபடி இருந்தது. இதனால் மலைரயில் கடந்து செல்லும் இருப்புப்பாதையில் கடந்த அக்.17 ஆம் தேதியன்று மரங்கள் சாய்ந்தன. மேலும், மழை யின் தீவிரம் தொடர்ந்து அதி கரித்த காரணத்தினால் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உருவானது. இதனையடுத்து கடந்த அக்.18 ஆம் தேதி முதல் அக்.20 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் மலைரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் தற்போது மழை யின் அளவு ஓரளவு குறைந்த தையடுத்து ஏற்கனவே அறிவித் தபடி மூன்று நாட்களுக்கு பின்பு திங்களன்று மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியது. மேட்டுப் பாளையம் உதகை இடையே யான பாரம்பரிய மலைரயில் சேவை துவங்கியதையடுத்து இதில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச் சியுடன் பயணம் மேற்கொண் டனர்.