tamilnadu

உதகை மற்றும் கோவை முக்கிய செய்திகள்

ஓய்வூதியதாரர் குறைதீர் கூட்டம்

உதகை, ஜூலை 13- தமிழ்நாடு அரசின் பல் வேறு துறைகளில் பணி யாற்றி ஓய்வு பெற்ற ஓய் வூதியதாரர்கள் குறை தீர் கூட்டம் ஆக.8ஆம் தேதியன்று மாவட்ட  ஆட்சி யர் அலுவலகத்தில் ஆட்சி யர் தலைமையில் நடை பெற உள்ளது. எனவே,  ஓய்வூதியம் கிடைக்கப் பெறாதவர்கள் மற்றும் ஓய்வூதிய பலன்கள் கிடைக் கப் பெறாதவர்கள் தங்களது குறைகளை இரட்டை பிர திகள் தயார் செய்து மாவட்ட ஆட்சியர் அல்லது அவரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) க்கு ஜூலை  26ஆம் தேதிக்கு முன்னர் கிடைக்குமாறு அனுப்புவ தோடு, குறை தீர் கூட்டத் திலும் பங்கேற்குமாறு மாவட்ட நிர்வாகம் விடுத்த அழைப்பில் கூறியுள்ளது.

மனைவியைக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

கோவை, ஜூலை 13- பொள்ளாச்சியில்  மண் ணெண்ணெய் ஊற்றி எரித்து மனைவியைக் கொலை செய்த கணவ னுக்கு ஆயுள் தண்டனை  விதிக்கப்பட்டுள்ளது.  கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 11-1 -2016 அன்று குள்ளக்காபாளையத் தில் கணவன் மனைவிக்கி டையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் மனைவி உமாமகேஸ்வரி (33) மீது மண்ணெண்ணெயை ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டார். இது  தொடர்பான வழக்கு கோவை முதலாவது நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு வெள்ளியன்று வழங் கப்பட்டது. இதில் கணவன் குமாருக்கு ஆயுள் தண்ட னையும், 1000 ரூபாய் அபரா தம் விதித்து கோவை கூடுதல் முதலாவது நீதி மன்ற நீதிபதி குணசேகரன் தீர்ப்பு அளித்தார்.