பொல்லானுக்கு நினைவு சின்னம் அமைக்க கோரிக்கை
நினைவு நாள் அரசு சார்பில் நாளை அனுசரிப்பு
ஈரோடு, ஜூலை 15- சுதந்திர போராட்ட வீரரான பொல் லானுக்கு, அவர் வசித்த ஜெயராமபுரத் தில் நினைவு சின்னம் அமைத்து அரசு விழா எடுக்க வேண்டும் என அவரது வாரிசுதாரர்கள் வேண்டுகோள் விடுத் துள்ளனர். இதற்கிடையே, பொல்லான் நினைவு நாள் நிகழ்ச்சி அரசு சார்பில் மொடக்குறிச்சியில் புதனன்று (ஜுலை 17) அரசு விழாவாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம், பொல்லான் வாரிசுதாரர்கள் முருகன் மற்றும் அவரது குடும்பத்தார் வழங்கிய மனுவில் கூறி யிருப்பதாவது, சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையுடன் இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டவர் பொல்லான். இவரை, ஆங்கிலேயர் பிடித்து தூக்கிலிட்டனர். இவர் வாழ்ந்து மறைந்த ஈரோடு மாவட்டம் ஜெயராம புரத்தில், அவருக்கு நினைவு சின்னம், மணி மண்டபம் போன்றவை அமைக்க வேண்டும். அவரது பிறந்த நாள், நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். அவரது வாரிசுதாரர் என்ற முறையில், நாங்கள் இவ்விடத்தை பரா மரிக்கவும், விழாவை சிறப்பாக நடத்தவும் உதவ தயாராக உள்ளோம் என அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அரசு நிகழ்ச்சியாக அனுசரிப்பு
இதற்கிடையே, பொல்லான் நினைவு நாள் நிகழ்ச்சி அரசு சார்பில் மொடக் குறிச்சியில் புதனன்று (ஜுலை 17) அரசு விழாவாக நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து, ஈரோடு மாவட்ட ஆட்சி யர் சி.கதிரவன் விடுத்த செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது, சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு மெய் காவலராக இருந்து, ஆங்கிலே யர்களை எதிர்க்க துணையாக இருந்த பொல்லானை நினைவு கூறும் வகையில், அவரது நினைவு நாள் நிகழ்ச்சி அரசு சார்பில் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. மேலும், சென்னை உயர்நீதி மன்றத்தில் இக்கோரிக்கை குறித்த வழக்கில் அரசு அலுவலக வளாகத்தில், பொல்லான் புகைப்படத்தை வைத்து, பொதுமக்கள் மாலை அணிவித்து அஞ் சலி தெரிவிக்கும் வகையில் அவரது புகைப்படத்தை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள் ளது. இந்த உத்தரவுப்படி வரும் ஜுலை 17 (புதனன்று) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை, மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்தில், அரசு சார்பில் பொல்லான் உரு வப்படத்துக்கு மாலை அணிவித்து அவரது நினைவு நாள் அனுசரிக்கப்படும். அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த லாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித் துள்ளார்.
மக்கள் நீதிமன்றத்தில் 4,196 வழக்குகளுக்கு தீர்வு
கோவை, ஜூலை 15- கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4,196 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்.சக்திவேல் தலைமையில், செயலாளர் முது நிலை சார்பு நீதிபதி என்.ஷர்மிளா முன்னி லையில் சனியன்று கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இம்மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையி லுள்ள சமரசம் செய்யக் கூடிய, சிறு குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள் மற்றும் தொழிலாளர் சம்மந்தப்பட்ட வழக்குகள் மற்றும் நிலுவை யில் இல்லாத வழக்குகள் என மொத்தம் 10,867 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 4,196 வழக்குக ளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மொத்தத் தீர்வு தொகை ரூ.23,66,06,315 ஆகும். இம்மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.குணசேகரன், பி.முருகேசன், சி.சஞ் சய்பாபா, ௭.மணிமொழி, பூரண ஜெய ஆனந்த், மலர் வாலன்டினா, ஜெ. ராதிகா, எஸ்.கோவிந்தராஜன், முகம்மது பரூக், எஸ்.நாகராஜன், எம்.அகிலா சாலினி, எஸ்.ரவி மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் எஸ்.ஏ. ஸ்ரீராமுலு, வி.ராமசாமி, ஆர்.தண்ட பாணி, ராமசாமி, ஆர்.ராஜூ மற்றும் பட்டி யல் வழக்கறிஞர்கள் மூலம் இம்மக்கள் நீதி மன்றத்தில் வழக்குகளுக்கு தீர்வு காணப் பட்டது. இம்மக்கள் நீதிமன்றத்தில் இரண்டா வது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நிலுவை யிலிருந்த நில ஆர்ஜித வழக்கு ஒன்றில் ராமகிருஷ்ணன் மற்றும் கோபாலகிருஷ் ணன் என்பவர்களுக்கு இந்திய உணவு கழகத்திடமிருந்து ரூ.23,21,541-க்கான காசோலையை கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்.சக்திவேல் வழங்கினர்.