tamilnadu

img

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கில் இரு மாணவர்கள் பலி

மே.பாளையம், ஜூலை 12- மேட்டுப்பாளையம் பகுதியில் பவானி யாற்றில் மூழ்கி இரு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.  கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில்  பி.காம் இரண்டாமாண்டு படித்து வந்தவர் பிரகாஷ் (19). இதே கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாமாண்டு படித்து வருபவர் கோடீஸ் வரன்  (19). நண்பர்களான இவர்கள் இரு வரும் தங்களது கல்லூரி தோழர்கள் 17 பேரு டன் வெள்ளியன்று காலை சுற்றுலா விற்காக மேட்டுப்பாளையம் வந்துள்ள னர். மேட்டுப்பாளையம் அடுத்துள்ள  சிறுமுகை என்னுமிடத்தில் உள்ள பம்ப்  ஹவுஸ் பகுதியில் ஓடும்பவானியாற்றில் இறங்கி 19 பேரும்குளித்து விளையா டியுள்ளனர். அப்போது திடீரென ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகரித்தது. அதிகரித்த வெள்ளத்தில் சிக்கி கொண்ட மாணவர்கள் தத்தளிக்க துவங்கினர்.  நீருக்குள் மூழ்கி உயிருக்கு போராடிய வர்களை பம்ப் ஹவுஸ் அமைக்கும் பணி யில் இருந்த தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கயிற்றின் உதவியுடன் ஒவ் வொருவராக மீட்டு வந்தனர். இதில் 17 மாணவர்கள் உயிர் தப்பிய நிலையில் பிர காஷ் மற்றும் கோடீஸ்வரன் ஆற்றில் அடித் து செல்லப்பட்டு பலியாகினர்.  இதுதொடர்பான தகவல் கிடைக்கப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மீட்பு துறையினர் மற் றும் காவல்துறையினர் உள்ளூர் பரிசல் ஓட்டிகளின் உதவியுடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவர்களின் உடல்களை தேடி வந்தனர். சுமார் மூன்று மணி நேர தேடலுக்கு பின்னர் கோடீஸ்வ ரனின் உடலை மீட்டனர். பிரகாஷின் உட லை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்னதாக, வியாழனன்று இதே போல கோவை வெள்ளலூரை சேர்ந்த பிரமோஜ் (19) என்ற கல்லூரி மாணவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானியாற்றில் மூழ்கி பலியானது குறிப்பிடத்தக்கது.  கடந்த ஒரு வார காலமாக பவானி யாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்து வரும் மழை காரணமாகவும், நீர்மின் உற்பத்தி பணிக்காக பில்லூர் அணையில் இருந்து பவானியாற்றில் தண்ணீர் வெளியேற்றப்ப டுவதாலும் நீர்வரத்து அதிகரித்து ஆற்றின் வேகம் உயர்ந்தபடி உள்ளது. எந்த நேரமும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால் பவானியாற்றில் இறங்கி குளிக்கக் கூடாது, பரிசல் ஓட்டுவதோ மீன் பிடிப்பதோ கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத் துள்ள நிலையில் இந்த உயிர் பலிகள் நிகழ்ந் துள்ளன.