தருமபுரி, ஜூன் 9- அரூர் அருகே மின்சாரம் தாக்கியதில் தந்தை, மகன் ஆகிய இருவரும் உயிரிழந்த னர். தருமபுரி மாவட்டம், அரூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சௌந்தரராஜன் (60), ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர். இவரது மகன் கௌதம் (27). சனியன்று காலை வீட்டில் உள்ள கழிப்பறைக்கு செல்வதற்காக, கௌதம் மின் விளக்கின் சுவிட்சையை போட்டுள்ளார். அப்போது, எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கியுள் ளது. இதையறிந்து மகனை காப்பற்ற சென்ற அவரது தந்தை சௌந்தர ராஜனும் மின்சாரம் தாக்கியதில் இரு வரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து சௌந்தரராஜனின் மூத்த மகன் சௌராஷ் (31) அளித்த புகாரின் பேரில் அரூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.