கோவை, ஆக.13- கோவை அருகே இரு லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந் தனர். சேலம் மாவட்டம், கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (40). இவர் டேங்கர் லாரி ஒட்டுநராக உள்ளார். இந்நிலையில் புத னன்று இரவு லாரியில் சேலம் - கொச்சின் புறவழிச் சாலை வழியாக கேரளா விற்குச் சென்றுள்ளார். அதி காலையில் கோவை மாவட் டம் செட்டிபாளையம் அருகே வந்தபோது, கேரளா மாநிலத்தில் இருந்து வந்து கொண்டிருந்த ஈச்சர் லாரி மீது, டேங்கர் லாரி மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளானது.
இதில், ஈச்சர் லாரியை ஓட்டி வந்த திருப்பூரைச் சேர்ந்த வீர மணி மற்றும் உடனிருந்த கீளினர் ஆகியோர் நிகழ்வி டத்திலேயே உயிரிழந்தனர். இருவரின் உடல்களும் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. லேசான காயம டைந்த டேங்கர் லாரி ஓட்டு நர் சேகர், சுந்தராபுரம் பகுதி யில் உள்ள தனியார் மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து செட்டி பாளையம் காவல் துறையி னர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.