tamilnadu

img

பணியில் வீர மரணமடைத்த காவலர்களுக்கு அஞ்சலி

தருமபுரி, அக். 21- பணியில் வீர மரணமடைந்த 292 காவலர்க ளுக்கு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நாடுமுழுவதும் அக்டோபர் 21 ஆம் தேதியன்று காவல் துறையில் பணியில் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு  வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட் டது. இதன்ஒருபகுதியாக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள  நினைவு தூணில் நடப்பாண்டில் காவல் துறையில் பணிபுரிந்து வீர மரணமடைந்த 292 காவலர் களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில்  தருமபுரி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ராஜன் நினைவு தூணில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து  டி.எஸ்.பி.க்கள் மற்றும் காவ லர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் காவல்துறை யினர் வானை நோக்கி 21 குண்டுகள் முழங்க துப்பாக்கியால் சுட்டு காவலர்களின் வீர வணக் கங்களை செலுத்தினர்.